Monday, March 14, 2011

வட போச்சே - சிறுகதை

"இந்த கதை மற்றும் கதையில் வரும் கதாபாத்திரம் முழுக்க முழுக்க கற்பனையே, யார் மனதையும் புண்படுத்த அல்ல"

இடம்: மேல் மருவத்தூர் பேருந்து நிலையம்
மணி: மாலை 4
நாள்: ஒரு நல்ல நாள்

சென்னைக்கு அடுத்த பஸ் எப்போ வரும் என்று கேள்வி எழுப்பியவாறு தெருவோர டீ-கடைக்குள் நுழைந்தான் நெடுமாறன். இவன பத்தி சொல்லணும்னா வயது 24, சென்னையில் உள்ள ஒரு தனியார் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறான். விடுமுறை நாள், சரி அம்மன் அருள் பெற்று ப்ராஜெக்ட் மேனேஜர் ஆகிடனும் அப்படினு ஒரு நினைப்புள்ள மேல் மருவத்தூர் கோவிலுக்கு விடியற் காலைல கெளம்பி அம்மன் தரிசனம் முடிச்சுட்டு பிறகு அன்னதானம் புண்ணியத்துல மதிய உணவ முடிச்சுட்டு சென்னைக்கு போக இப்போ பேருந்து நிலையத்துல காத்துட்டு இருக்கான். சரி சரி கதைக்கு போவோம், நெறைய இவன பத்தி சொல்லிட்டேன்.

ஹ்ம்ம்ம் எங்க விட்டேன், சென்னைக்கு போக எத்தன மணிக்கு அடுத்த பஸ்னு கேட்டுகிட்டே தெருவோர டீ-கடைக்குள் நுழைந்தான் நெடுமாறன். அதுக்கு டீ-கடைக்காரர், எப்பவும் இன்னாத்திக்கு ஒரு பஸ் பூடும், என்னனு தெரில இம்மாம் நேரம் ஆகியும் ஒன்னும் காணல என்று சொல்லி அவர் வேலையை தொடர்ந்தார். நேஷனல் ஐவேஸ் உற்று நோக்கிய பின்பு மீண்டும் நெடுமாறன் டீ-கடைக்காரரிடம் இப்புடி தான் எப்பவும் ரோட்ல வண்டி இல்லாம இருக்குமானு கேக்க, அதுக்கு அவர் இல்ல இல்ல எப்பவாவது யாராச்சும் அரசியல் தலைவருங்கோ இப்புடிக்கா போன்னா கொஞ்சம் நேரத்துக்கு வண்டில்லாம் இல்லாம கெடக்கும், அப்பால மொத்த வண்டியும் அவர் போன்ன பின்னால போவும்னு சொல்லி முடிச்சாரு. ஓஹோ அப்படியானு கேட்டுட்டு செரிங்கனா ஒரு டீ போடுங்க அப்படியே இந்த வடை எடுத்துகுறேன்னு சொல்லி முடிச்சான் நெடுமாறன்.



வடை சாப்டுட்டு இருந்த நெடுமாறன் அங்க இருந்த நாளிதழ் விளம்பரத்தில் உள்ள எதிர்க்கட்சி விளம்பரத்தை வடையும் கையுமா பாத்துகிட்டு இருந்தான். அதில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவர்க்கும் குளிர்சாதன பெட்டி இலவசம் என்று பார்த்து எரிச்சல் அடைந்தான். ஏன் என்றால், இந்த ஆட்சியில் தரும் இலவச தொலைக்காட்சி இவன் வசிக்கும் இடத்திற்கு வரவில்லை. அந்த எரிச்சலை வெளிக்காட்டமல் டீ-கடைக்காரரிடம் உங்க ஏரியால இலவச டிவி தந்துடாங்கலானு கேட்க அவரோ இப்பதான்பா தேர்தல் வருதுனு குடுத்தாங்க என்று தொடர்ந்து, ஏதோ இந்த அம்மா வந்தா "Fridge" தராங்கலாமே பாப்போம்னு சொல்லி டீ ரெடி சார்'நு டீ-கப்ப நெடுமாறனிடம் தந்து அவர் வேலையை தொடர்ந்தார். ஹ்ம்ம் என்று உள்ளுக்குள் எரிச்சலுடன் கூடிய பெருமூச்சுடன், டீ பருக ஆரம்பித்தான்.

சற்று தொலைவில் "siren" ஒலி கேட்க, என்ன நடக்கிறது என்று பார்க்க ஆர்வத்தோடு "siren" ஒலி வரும் திசை நோக்கியவாறு டீ'யும் பருகி கொண்டு பார்த்து கொண்டிருந்தான். சிறிது தொலைவில் மிகுந்த வேகத்துடன் "siren" பொருத்திய வாகனங்கள் வர, விழி மூட மறந்து நெடுமாறனும் அங்கு குடி இருந்தவர்களும் எந்த அரசியல் தலைவர் வர்ராருன்னு பாத்துகிட்டு இருக்கும் பொழுது பாக்கெட்டில் இருந்த கைபேசி அமைதியாக அழைப்பு வருவதை தெரிவிக்க கிச்சு கிச்சு மூட்ட(vibrate mode), அதை பெரிது படுத்தாமல் மீண்டும் வாகனம் வரும் திசையை உற்று நோக்கி கொண்டிருந்தான், கண் இமை இமைபதற்குல் முதலில் நான்கு காவல் துறை வாகனங்கள் மின்னலென சிறி பாய பின்னால் ஆளும் கட்சியின் குண்டர் மன்னிக்கவும் தொண்டர் படை சூழ ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடர்ந்து வர. என்ன நடக்கிறது என்று தெரியாமல் குடி இருந்த அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.



நெடுமாறனும் எந்த தலைவர்டா இது, ஒன்னுக்கு மேல ஆம்புலன்ஸ் போகுது அப்படினு யோசிக்கும் பொழுது மீண்டும் அவன் கைபேசியில் குறுந்தகவல் அழைப்பு மணி அடிக்க, அதில் இருந்த செய்தி அவனின் இதய துடிப்பை அதிகரித்தது. அது அவனுடன் பணிபுரியும் ஒரு பெண்ணிடம் இருந்து வந்த குறுந்தகவல். அது என்னவெனில் திண்டிவனம் அருகில் நடந்த மிக பெரிய ஆளும் கட்சியினர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பால் அணைத்து ஆளும் கட்சியினரும் இறந்து விட்டதாகவும். மேலும் மதுரையில் நடந்த மிக பெரிய எதிர் கட்சியினர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பால் அணைத்து எதிர் கட்சியினரும் இறந்து விட்டதாகவும். நாடே இப்பொழுது கலவரத்தில் தீப்பற்றி எரிகிறது என்றும், நீ முடிந்தால் கோவிலிலேயே இன்று பாதுகாப்பாக தங்கிக்கொள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் நெடுமாறனின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது.

அதற்கு காரணம்........ "ச்ச இலவச தொலைக்காட்சியும் போச்சு , இலவச குளிர்சாதன பெட்டியும் போச்சே"

மொத்தத்தில் வடை போச்சே...
:(.....



இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால், மறக்காமல் இன்ட்லி மற்றும் தமிழ் மணமில் உங்கள் வோட்டை போடுங்கள். மேலும் உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...

4 comments:

Arun said...

nasamapoochi!!!!!!

Unknown said...

bhagavaan neengala adhu.....

poongundran said...

nice,,,

Anonymous said...

5 nimisham poche!

Post a Comment