நான் என் மனதில் கிடந்த பழைய குப்பைகளை கிளறியதில், என் மனம் என்னும் குழந்தை கிறுக்கிய சில கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்கு.
1 ) கோடி முறை யோசித்தும் தாயிற்கு நன்றி கூறவும், தாய்க்கு இணையான ஒரு வார்த்தையையும் எந்த மொழியில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
2 ) கருநிற மனிதனின் உழைப்பில் உதிர்ந்த வேர்வை துளிகளின் உண்மையான கூலி, வெண்ணிற மனிதன் வாழும் நாட்டின் வங்கி பாதுகாப்பு அறையில் குளிர் காய்கிறது.
3 ) பிறந்ததில் இருந்து தொடர்ந்து புகைத்து வந்த புகைவண்டி கூட தன்னையும் தன் சுற்றத்தையும் பாதுகாத்து தொடர்ந்து வாழ, தன் புகை பழக்கத்தை காலமாற்றத்தில் மறந்து விட்டு தொடர் வண்டியாக வாழும் பொழுது, அதனுள் பயணிக்கும் மனிதன் ஏன் இன்னும் புகைத்து வருகிறான்!
4 ) உணவுப்பாத்திரத்தில் ஓட்டை விழுந்தால் உன் வீட்டுக்கு உணவில்லை, ஓசோனில் ஓட்டை விழுந்தால் உன் நாட்டிற்கே உணவில்லை.
5 ) தன்னை தரம் தாழ்த்திக்கொண்டும் தனக்கு வரும் பாதிப்பை எல்லாம் பொறுத்துக் கொண்டும், இறுதியில் தன்னை இவ்வளவு சித்ரவதை செய்தவர்களையே தன் தலை மேல் வைத்துக் கொண்டாட செய்வதுதான் தங்கத்தின் திறமை.
6 ) அது என்ன அவளைப் பார்த்த அந்த நொடி பொழுது ஒளியின் வேகத்தை விட வேகமாக என்னுள் காதல் மலர்கிறது!
7 ) தள்ளாடியபடி தண்ணிரின் மேல் சரக்குடன் செல்லும் சரக்குக் கப்பலே இறுதியில் தன் இலக்கிற்கு தெளிவாக செல்லும் பொழுது, மனிதன் மட்டும் ஏன் சரக்கடித்து விட்டுத் தன் தடம் மாறிச் செல்கிறான்.
8 ) தன் பசிக்காக அல்லாமல் ருசிக்காக சாப்பிடும் இவர்களுக்கு பசியாற்ற தன் உயிரை துச்சமாக எண்ணி இருசக்கர வாகனத்தில் பிட்சா எடுத்து செல்லும் இவருக்கு உள்ள அக்கறை, ஏன் என் நாட்டின் உள்ள ஏழைகளின் பசி ஆற்ற இந்த நாட்டின் தலைவர்களுக்கு இல்லை.
9 ) பட்டினியால் இறப்பவர்கள் இந்த நாட்டில் அதிகரித்தால், பின் வரும் சமுதாயம் "மனிதம் நிறைந்த மனிதர்கள்" என்ற ஒரு இனம் வாழ்ந்தது என்று கூறும் நிலை உருவாகும்.
10 ) தொழில்நுட்ப அறிவு வளர்ந்த இக்காலத்தில் செயற்கையாக இதயத்தை பொறுத்தினாலும், அதனுள் மனம் என்னும் மனித மாண்பை செயற்கையாக எவராலும் பொறுத்த இயலாது.
இது வெறும் தொடக்கம் தான், இன்னும் என் மனம் கிறுக்கும் கிறுக்கல்கள் முடியவில்லை...
எனது கிறுக்கல்களின் பாகம்-1 பார்க்க இங்கே சொடுக்கவும்
இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால், மறக்காமல் இன்ட்லி மற்றும் தமிழ் மணமில் உங்கள் வோட்டை போடுங்கள். மேலும் உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...
4 comments:
அருமை...வாழ்த்துக்கள்
nalla panra da..keep it comin..
machi really nice ,,,,,
@ மதுரை சரவணன் , ganapathy, kundran
மிக்க நன்றி, :)
Post a Comment