நான் என் மனதில் கிடந்த பழைய குப்பைகளை கிளறியதில், என் மனம் என்னும் குழந்தை கிறுக்கிய சில கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்கு.
1 ) பிரம்பு கட்டையால் அடித்த வாத்தியார் என்றாலும், அவர் மூங்கில் கட்டையில் ஏறி செல்லும் பொழுது கண்கள் கலங்கத்தான் செய்கிறது.
2 ) கண் இமைக்கும் நேரத்தில் காற்றிலே மாயமாய் தொலைந்தது, அவள் எனக்கனுப்பிய ஈமெயில் காதல் கடிதங்கள். ஆனால் ஏன் அவள் நினைவுகள் என் இதய ஹார்டிஸ்கில் அழிந்து போக மறுக்கிறது!
3 ) புதியதாய் ஒருவன் தன்னை ஏறி மிதித்தால், உயிரில்லா செருப்பும் கூட தன் கோபத்தை காண்பிக்க கடிக்கிறது. ஏன் இந்த உயிருள்ள மனிதன் மட்டும் தன்னை ஏறி மிதித்தவனிடம் ஐந்து ஆண்டு காலம் தன்னையும் தன் தேசத்தையும் அடிமையாக கொடுத்து ஊழல் செய்ய விடுகிறான்!
4 ) ஒரு பாட்டரி தந்த எனக்கு இந்த கடிகாரம் 24 மணி நேரமும் அயராமல் தன்னால் முடிந்த வரை நேரம் காட்டுகிறது. ஆனால் ஏன் இந்த அரசியல் தலைவர்கள் நான் தந்த ஒரு வோட்டுக்காக எனக்கு ஏதும் செய்யாமல் இருக்கிறார்கள்!
5 ) தனக்கு வரும் கட்டளைகள் எந்த மொழியில் இருந்தாலும் தன் தாய் மொழியான பைனரி மொழியில் மாற்றி வேலைகள் செய்யும் இந்த உயிரில்லா கணினியின் அறிவு, ஏன் இந்த தாய் மொழி மறந்த தமிழ் கணினி மேதைகளுக்கு இல்லை.
6 ) இருபத்தி நான்கு மணி நேரமும் சுழன்று மணி காட்டிக் கொண்டு வேலை செய்யும் கடிகாரம் கூட தன்னிடத்தில் பதிரெண்டு மணி நேரம் தான் வைத்து உள்ளது. ஆனால் ஏன் இந்த அரசியல் பெரிச்சாளிகள் மட்டும் தன் தேவைக்கு அதிகமாக பணம் வைத்து உள்ளனர்
7 ) உனக்கென்று ஒன்றும் இவ்வுலகில் இல்லை என்று சொல்லத்தான், இறைவன் நம்மை இந்த புவியில் நிர்வாணமாய் பிறக்க வெய்த்தானோ.
8 ) இவ்வுலகில் நடக்கும் தீயவை கேட்காமல் இருக்க, கண்ணுக்கு இமை தந்தாற்போல் காதிற்கும் ஏதேனும் தந்து என்னை படைக்காமல் விட்டது ஏன் இறைவா!
9 ) இவன் யார் என் ரத்த சம்பந்தமா, வெங்காயம் வெட்டினால் எனக்கு ஏன் கண்ணீர் வருகிறது! (இது எங்கோ கேட்ட மாதிரியும் உள்ளது)
10 ) குரங்கிற்கும் மரத்திற்கும் உள்ள தொடர்பு, குரங்கில் இருந்து வந்த மனிதனுக்கும் இருக்கிறதோ என்னவோ. ஏன்னென்றால் மனிதன் இப்பொழுதும் பேருந்தில் உள்ள மரப் படிக்கட்டில் தொங்கிக் கொண்டுத் தான் செல்கிறான்.
இது வெறும் தொடக்கம் தான், இன்னும் என் மனம் கிறுக்கும் கிறுக்கல்கள் முடியவில்லை...
இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால், மறக்காமல் இன்ட்லி மற்றும் தமிழ் மணமில் உங்கள் வோட்டை போடுங்கள். மேலும் உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...
4 comments:
அருமையான கருத்தை தாங்கி வரும் அற்புதமான வரிகள்!!
நன்றி தங்கபாலு...
:)
machi really 3 and 7 and 9 i like it more,,,,
அரசியலில் அதிக ஆதகமாக இருக்கீர்ப் போல!!!!
Post a Comment